search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband and wife injured"

    • ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.
    • மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யா ணசுந்தரம்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது சொந்த ஊரில் திருவிழாவை காண்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதே எதிர் திசையில் வடக்கு காட்டு கொட்டாய் தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.இந்த விபத்தில் கல்யாணசுந்தரம், அவரது மனைவிமஞ்சுளா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் கணவன் தனது மனைவி குழந்தையுடன் படுகாயம் அடைந்தார். அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் விவசாயி காமராசு (வயது40). இவரது மனைவி தேவி (30).இவர்களுடைய மகன் பாலமுருகன் (3).

    இந்த நிலையில் காமராசு நேற்று தனது மனைவி மகனுடன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

    அவர் நாஞ்சிக்கோட்டையை அடுத்துள்ள பைபாஸ் சாலை அருகே செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது மதுபோதையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் காமராசுவின் மோட்டார் சைக்கிள் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காமராசு, தேவி மற்றும் குழந்தை பாலமுருகன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து அந்த வழியாக பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகள் , சாலையில் காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டனர். பிறகு அவர்கள் 3 பேருக்கும் முதலுதவி அளித்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×