search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "houses demolition"

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் மற்றும் ஒரு வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது.

    இதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற தாசில்தார் கல்யாணி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமித்து கட்டி இருந்த 10 கடைகள், ஒரு வீட்டை இடித்து அகற்றினர். பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பெருவாயல்காலனி. இங்கிருந்து செல்லும் பொன்னேரி சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பெருவாயல் காலனியில் உள்ள 20 வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது சம்பந்தமாக அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரங்களுடன் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறினர்.

    ஆனால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் சென்னை- கொல்கத்தா சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்திரா என்ற பெண் தனது உடலில் மண்எண்ணையை ஏற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 6 பெண்களை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.

    டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
    ×