search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel employee dies"

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கடகம்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 36). கோவையில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது நண்பர்கள் புதியராஜ் (35), உதயகுமார் (33) ஆகியோருடன் காமராஜ் நேற்று இரவு கடகம்பட்டியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்காக டீசல் வாங்கிக் கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது.

    களக்காவயல் என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் காமராஜ் சம்பவ இடத்துலேயே பரிதாபமாக இறந்தார். புதியராஜின் 2 கால்களும் நசுங்கின. உதயகுமாருக்கு ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து பற்றி அறிந்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேனை ஓட்டி வந்த வேன் டிரைவர் வெங்கட்ராமன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ளது. இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மக்னா யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

    மேலும் விவசாயிகளை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனால் இரவு காவலுக்கு செல்ல அச்சமடைந்தனர்.

    போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார்(வயது47). தமிழக-கேரள எல்லையில் 18-ம் படி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காட்டு யானை குமாரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய யானை குமாரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
    ×