என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
Byமாலை மலர்12 July 2018 4:57 AM GMT (Updated: 12 July 2018 4:57 AM GMT)
உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ளது. இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மக்னா யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.
மேலும் விவசாயிகளை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனால் இரவு காவலுக்கு செல்ல அச்சமடைந்தனர்.
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார்(வயது47). தமிழக-கேரள எல்லையில் 18-ம் படி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காட்டு யானை குமாரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய யானை குமாரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ளது. இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மக்னா யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.
மேலும் விவசாயிகளை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனால் இரவு காவலுக்கு செல்ல அச்சமடைந்தனர்.
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார்(வயது47). தமிழக-கேரள எல்லையில் 18-ம் படி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காட்டு யானை குமாரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய யானை குமாரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X