search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hot weather"

    • கல்லூரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மகளை விட்டுவிட்டு செல்வது தந்தையின் வழக்கம்
    • அப்பகுதியில் வெப்பம் சுமார் 26 டிகிரி சென்டிகிரேடு இருந்து வந்தது

    தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் உள்ள நாடு போர்ச்சுக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். லிஸ்பன் நகரில் உள்ள கேம்பொலைடு எனும் இடத்தை தலைமையகமாக கொண்டது அந்நாட்டு அரசாங்கத்தின் நோவா பல்கலைக்கழகம்.

    இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் விரிவுரையாளராக பணிபுரிபவர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான காப்பகத்தில் தனது 10-வயது மகளை விட்டுவிட்டு தனது கல்லூரி பணிக்கு செல்வது வழக்கம்.

    இரு தினங்களுக்கு முன் காலை 08:00 மணியளவில் அவர் தனது காரில் மகளை ஏற்றி கொண்டு காப்பகத்திற்கு முன்பாக 300 அடி தூரத்தில் காரை நிறுத்தியுள்ளார். தனது மகளை கல்லூரி காப்பகத்தில் விட்டுவிட்டு செல்லாமல், வழக்கத்திற்கு மாறாக காரிலேயே விட்டுவிட்டு சென்றார்.

    கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளில் கவனமாக இருந்த அவர், பிறகு மீண்டும் தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மகள் அதில் சுயநினைவின்றி கிடந்தார். பதட்டமடைந்த அவர், அவளை சுயநினைவிற்கு கொண்டு வர அனைத்தையும் செய்தும் அக்குழந்தைக்கு நினைவு திரும்பவில்லை.

    அந்நாட்டு அவசரகால மருத்துவ சேவை பிரிவிற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து குழந்தைக்கு அவசர சிகிச்சையளித்து நினைவை மீட்க போராடினர். அவசரகால சேவை பிரிவினர் வரும்போதே அந்த இடத்திற்கு சிறுமியின் தாயும் வந்தார்.

    மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயன்றும் துரதிர்ஷ்டவசமாக சிறுமி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். தாயும், விரிவுரையாளரும் இச்சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அப்பெற்றோருக்கு உளவியல்ரீதியான உதவியும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் வெப்பத்தின் அளவு சுமார் 26 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு இருந்ததால், காருக்குள்ளே 50 டிகிரி அளவிற்கு அதிகரித்திருக்கலாம் என்பதால் அதனால் அச்சிறுமி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மேலும் விவரங்கள் தெரிய வரும்.

    இருப்பினும், பரிசோதனை அறிக்கை மக்களின் பார்வைக்கு வெளியிடப்படாது என தெரிகிறது.

    • அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் புழுக்கம் நிலவுவதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மதிய நேரங்களில் முடிந்த அளவு பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரம், தொழிலுக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே இளநீர் கடை, கரும்பு பால் கடைகள் புதிதாக தோன்றி உள்ளன.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 101.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    அனல் காற்றுடன் வெயில் பதிவாகி உள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால் கீழ்பவானி வாய்க்கால் போன்றவற்றுக்கும் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

    மேலும் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர்.

    ×