search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hookah bar"

    • தற்போது கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
    • சென்னையில் புகைக்குழல் கூடங்கள் அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ, தமிழகத்திற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை. எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் தடையை மீறி ஹூக்கா பார் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் பல இடங்களில் தடையை மீறி ஹூக்கா போதைபார்கள் செயல்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதுபோன்ற பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வந்த ஹூக்கா பார் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலையிலும் ஹூக்கா பார் இயங்குவது தெரியவந்தது.

    திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாக ரத்தினம் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    இது தொடர்பாக விக்னேஷ், மணி, செல்வா, பாரதிராஜா, கவுதமராஜ், அமோஸ், தேலு, தேகியாம் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து புகைபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 8 பைப்புகள், 4 பாட்டில் போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஹூக்கா போதைக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் அடிமையாகி உள்ளனர். நுங்கம்பாக்கம் ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு இளம்பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள் என்பது தெரியவந்தது. ஹூக்கா சிகரெட் ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×