search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HCL Selection"

    • பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
    • காலை 9 மணி முதல் 10 மணி வரை தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கணிதம், வணிக கணிதத்தில் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் எச்.சி.எல். பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த தேர்வு எழுதுவதற்கு https://forms.office.com/r/ZbCFbsMxGeஎன்ற லிங்கை பயன்படுத்தி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும். வருகிற 19-ந் தேதி அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, 20-ந் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 21-ந் தேதி காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 22-ந் தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.எம். மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடக்கும் அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், செல்போன் கொண்டு வர வேண்டும். தேர்வாகும் மாணவர் – களுக்கு பயிற்சி கட்டணம் வழங்கப்படும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முழுநேர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சாப்ட்வேர் டெவலப்பர், அனாலசிஸ்ட், டிசைன் என்ஜினீயர், டேடா என்ஜினீயர், சப்போர்ட் அன்ட் புரோசஸ் அசோசியேட் ஆகிய பணி வழங்கப்படும். பணியில் சேர்ந்ததும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வரை பெற முடியும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×