search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "have a darshan of Sami"

    • மங்களகிரி பெருமாள் கோவிலில் அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள்மலை மங்கள கிரி பெருமாள் ஏராளமான பக்தர்களுக்கு குல தெய்வ மாக இருந்து வருகிறார். இதனால் புரட்டாசி மாதத்தையொட்டி பக்த ர்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    இதை தொடர்ந்து புரட்டாசி கடைசி சனி க்கிழமை என்பதால் பக்தர்கள் பலர் ஈரோடு மற்றும் பவானி பகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே குவிய தொடங்கினர்.

    இதை தொடர்ந்து அவர்கள் மலை அடிவார த்தில் கூடாரம் அமைத்து ெபருமாள் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி அளவில் பக்தர்கள் பலர் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் செம்மாலைகள் (பெரிய அளவிலான செருப்புகள்) கொண்டு வந்து ஊர்வலமாக சென்று மலை மீது உள்ள மரத்தி ல் கட்டி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி அதி காலை 2 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் பக்தர்கள் பலர் மொட்டை அடித்து பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்தினர். இதனால் பெருமாள் மலையில் இரவு முதல் விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் காலை வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து இன்று அதி காலை பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாச னை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொள ப்பலூர் பெருமாள் கோவில், அழுக்குளி பெரு மாள் கோவில், மேட்டுவளவு பெரு மாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெரு மாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், உள்ளி ட்ட கோவில்களில் புரட்டாசி கடைசி சனி க்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். அந்தியூர் பேட்டை திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் சனிக்கி ழமை மற்றும் அமாவாசையையொட்டி கோ பூஜை நடந்தது.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளையம்பாளை யம், சின்னத்தம்பி பாளை யம், அண்ணா மடுவு, கந்த ம்பாளை யம், பச்சாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்த ப்பாடி சந்தைபேட்டை பழ மையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்ய ப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொட ர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    ×