search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka sized"

    கோவையில் மேலும் ஒரு குட்கா குடோனை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். #Gutka
    கோவை:

    கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்கா ஆலை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் கோவையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவலின்பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் பல குடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை தாமஸ் வீதியை அடுத்த பொறிக்கார சந்து பகுதியில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள் நேற்று இரவு அந்த குடோனில் சோதனை நடத்த சென்றனர்.

    அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது. உடனே குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இன்று காலை குடோன் உரிமையாளர் வாகாராம் என்பவருக்கு தகவல் கூறி அவரை வரவழைத்து குடோனை திறந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாகாராம், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா தன்னுடையது அல்ல, வேறு ஒருவருக்கு குடோனை வாடகைக்கு விட்டிருந்தேன் என கூறினார். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
    நாகர்கோவில் கோட்டார் சரக்கல்விளை பகுதியில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். #Gutka #tamilnadu
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் சரக்கல்விளை பகுதியில் ஒரு வீட்டில் குட்கா புகையிலை பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அங்கு லாரியில் கொண்டுவரப்பட்ட குட்கா புகையிலையையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.41 லட்சம் ஆகும்.

    குட்கா பொருட்களை கொண்டு வந்த லாரி டிரைவர் மேட்டூரை சேர்ந்த சுதாகர் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கோட்டார் வாகையடி தெருவைச்சேர்ந்த கணேஷ், முதலியார்விளையை சேர்ந்த ஹரிகரசுதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் புத்தேரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    அவரை கைது செய்தால் தான் குட்கா புகையிலை கடத்தி வந்ததில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற விவரம் தெரியவரும். எனவே ரமேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சுதாகர், கணேஷ், ஹரிகரசுதன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    குட்கா புகையிலை பொருட்கள் நாகர்கோவிலில் மேலும் ஒருசில இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Gutka #tamilnadu
    கோவை நகரில் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் பதுக்கி வைத்துள்ள புகையிலை, குட்கா, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை அருகே கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை நகரில் கடந்த சில மாதங்களாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குட்கா பதுக்கி வைத்துள்ள கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை தாமஸ் வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாகாராம் என்ற வியாபாரி குடோன் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையில் வாகாராம் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாமஸ் வீதி அருகே உள்ள பொறிக்கார வீதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர் வராததால் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இன்று அங்கு சென்று சோதனை நடத்த உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த 2-ந் தேதி செல்வபுரம் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் ஒரு வீட்டில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1.5 டன் புகையிலை பொருட்களும், கோவை ராஜவீதி, தாமஸ் வீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த 10 மாதத்தில் மட்டும் 7 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. #tamilnews
    ×