search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "group gambling"

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதி, பஸ் நிறுத்தம், கடைவீதி உள்பட பல இடங்களில், சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் இந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது பணம் வைத்து சூதாடிய திருநள்ளாறு கந்தபழனிவேல், குணா, ராஜா, மகேஷ், பிரதீப், தாமரை, உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 சீட்டுக்கட்டு மற்றும் ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணம்-செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று இரவு சோனாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ஆனந்த் (வயது 46) என்பவர் வீட்டில் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51), அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), வெங்கட்டா நகரை சேர்ந்த மூர்த்தி (38), உருளையன்பேட்டையை சேர்ந்த ரெஜிஸ் (39), வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மணிராஜா (58) மற்றும் எல்லைப்பிள்ளைச் சாவவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பது தெரிய வந்தது.

    போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன் மற்றும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சோழத்தரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    சோழத்தரம் அருகே உள்ள வடக்கு பாளையங்கோட்டையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 39), கபில் (26), கலையரசன் (28) உள்ளிட்ட 6 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சூதாடிய சுந்தர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், செல்வராகவன் மற்றும் போலீசார், கெலமங்கலம் ரயில்வே நிலையம் மற்றும் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்க பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த கெலமங்கலம் முருகேசன் (35), மாதேஷ் (28), மஞ்சுநாத்(23), கிருஷ்ணன்(29), செட்டிப் பள்ளி ரமேஷ் (30), தொட்டகானப்பள்ளி லோகேஷ் (29), கெலமங்கலம் சுரேஷ் (24), சசிகுமார்(34), அண்ணா நகர் கோவிந்தன் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பணம் ரூ 450யை பறிமுதல் செய்தனர்.

    ×