என் மலர்
செய்திகள்

புதுவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
புதுவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணம்-செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று இரவு சோனாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ஆனந்த் (வயது 46) என்பவர் வீட்டில் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51), அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), வெங்கட்டா நகரை சேர்ந்த மூர்த்தி (38), உருளையன்பேட்டையை சேர்ந்த ரெஜிஸ் (39), வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மணிராஜா (58) மற்றும் எல்லைப்பிள்ளைச் சாவவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பது தெரிய வந்தது.
போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன் மற்றும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுவை ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று இரவு சோனாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ஆனந்த் (வயது 46) என்பவர் வீட்டில் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (51), அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), வெங்கட்டா நகரை சேர்ந்த மூர்த்தி (38), உருளையன்பேட்டையை சேர்ந்த ரெஜிஸ் (39), வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மணிராஜா (58) மற்றும் எல்லைப்பிள்ளைச் சாவவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பது தெரிய வந்தது.
போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 செல்போன் மற்றும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






