search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Six Arrested"

    மதுரையில் புகையிலை விற்ற 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 935 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை நகரில் கரிமேடு, தல்லாகுளம், கூடல்புதூர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மறைவான பகுதியில் புகையிலை விற்ற பெத்தானியாபுரம் சவுந்தரராஜன் (வயத 61), பி.பீ.குளம் ஆரோக்கியசாமி (50), சங்கர் (49), கூடல்புதூர் சுப்பிரமணியன் (58), முத்துக் குமார் (37), முனிச்சாலை ராஜா (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 935 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்

    மதுரை நகரில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

    பள்ளி, கல்லூரி அருகில் சமூக விரோதிகளால் போதை பொருட்கள் விற்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழத்தரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    சோழத்தரம் அருகே உள்ள வடக்கு பாளையங்கோட்டையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 39), கபில் (26), கலையரசன் (28) உள்ளிட்ட 6 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சூதாடிய சுந்தர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    ×