search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group-7"

    • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-7,8 தேர்வு நாளை தொடங்குகிறது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -3 பிரிவில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப் 7பி) நாளை (சனிக்கிழமை) காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெறுகிறது.

    இதேபோல் இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -4 பிரிவில் காலியாக உள்ள செயல் அலுவலா் நிலையில் உள்ள 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) நாைள மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை, மாலை இரு கட்டங்களாக தமிழ் தோ்வும், பொது அறிவுத் தோ்வு நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் இத்தேர்வுகளை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-7 தேர்வினை 7 மையங்களில் 2,594 போ் எழுதுகின்றனா். குரூப் 7பி ேதர்வினை 5 மையங்களில் 2,078 போ் எழுதுகின்றனா்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தேர்வு பணியில் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

    ×