search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grill workshop"

    • சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
    • தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். '3பி'யில் இருந்து '3ஏ1' நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது. எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஜி.எஸ்.டி.வரி வசூலிக்க முடியாமல் கூலிக்கு மட்டுமே வேலை செய்து வருகிறோம்.
    • கிரில் ஓர்க்‌ஷாப் தொழிலுக்கும் குறைந்தபட்சம் 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட கிரில் உரிமையாளர் நலச்சங்க செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் திருமுகம் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் சக்திவேல், சங்கர நாராயணன், கொள்கை பரப்பு செயலாளர் செம்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் பொறுப்பாளர் வெங்கடேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் திருமலை ரவி, அவிநாசி நிவின் விஷ்ணு, கோவை யுவராஜ், கவுரவ தலைவர்கள் ஜெயம் மூர்த்தி, ராசி கோபால், ஆறுமுகம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிக் கூடங்கள் போல் கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் ஜி.எஸ்.டி.வரி வசூலிக்க முடியாமல் கூலிக்கு மட்டுமே வேலை செய்து வருகிறோம். எனவே விசைத்தறி தொழில் கூடங்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போல் கிரில் ஓர்க்ஷாப் தொழிலுக்கும் குறைந்தபட்சம் 500 யூனிட் இலவசமாகவும் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்க வேண்டும்.

    மாநிலம் முழுவதும் கிரில் ஒர்க்ஷாப் தொழிலுக்கென்றே தனித்தொழில் பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாக அல்லது எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். எங்களது தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் விபத்தில் சிக்கி உடல் ஊனமோ அல்லது மரணமோ எய்துவதால் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    எனவே கிரில் ஒர்க்ஷாப் தொழிலுக்கென்று தனி நலவாரியம் அமைத்துக் கொடுத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்.இந்த தொழிலுக்கு அரசின் மூலம் மானியத்துடன் சொத்து பிணை இல்லாமல் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×