search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 16-ந்தேதி  உண்ணாவிரத போராட்டம் -  கிரில் ஒர்க்ஷாப்  உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு
    X
    கோப்புபடம். 

    சென்னையில் 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் - கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு

    • சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
    • தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். '3பி'யில் இருந்து '3ஏ1' நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது. எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×