என் மலர்
நீங்கள் தேடியது "govt doctors suspended"
- ஓட்டல் ஊழியர்களுக்கு டாக்டர்கள் ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
- பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில மாதங்களாக ஓட்டல்களில் விற்கப்படும் உணவு பொருள்கள் மீது பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹெல்த்கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு டாக்டர்களிடம் இருந்து ஹெல்த் கார்டு பெற்றவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என கேரள சுகாதாரத்துறை ஓட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது.
அரசின் உத்தரவை தொடர்ந்து கேரளாவில் ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து ஹெல்த் கார்டு பெற்று வருகிறார்கள்.
இதில் முறைகேடு நடப்பதாக சமீபத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து சிலர் ஹெல்த் கார்டு பெற்று கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஓட்டல் ஊழியர்களுக்கு டாக்டர்கள் ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் ஓட்டல் ஊழியர்களுக்கு ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய 3 டாக்டர்களும் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டுக்கு ஆஸ்பத்திரியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பில் இருந்த தற்காலிக ஊழியர் துணை புரிந்தது தெரியவந்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, ஹெல்த் கார்டு வழங்குவதில் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
- பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தது.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார்.
மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த குழந்தையின் சடலத்துடன் 12 மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் போராடி வருவதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஃப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.






