search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt doctors struggle"

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
    • முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    சென்னை:

    அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    அரசு மருத்துவர்களுக்கு, அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளில் 4 ஊதியப்பட்டை வழங்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தற்போது முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

    அப்போது அவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்று கூறினார். இதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அரசாணயை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இது கருணாநிதி போட்ட அரசாணையாகும். இதையும் முதல்-அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாணை நிறைவேற்றப்படாததால் இந்தியாவிலேயே தமிழக அரசு மருத்துவர்கள் குறைவான சம்பளம் வாங்கும் நிலையில் இருந்து வருகிறோம்.

    இது போன்று மேலும் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன் வைத்திருக்கிறோம்.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கலைஞர் மீண்டும் உயிர் பெற்று வரக்கோரி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி மவுன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தமிழக முதல்-அமைச்சர், மருத்துவர்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். #DoctorsStrike
    சென்னை:

    தமிழகம் முழுவதும் நாளை அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெருமாள் கூறி இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தமிழக அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசு டாக்டர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளி வரை காத்திருக்குமாறு கூறினார்கள். இருப்பினும் எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 18,600 அரசு மருத்துவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். புறநோயாளிகளின் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 7-ந்தேதி வரை கூட்டங்களை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந்தேதி முதல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாடு அரசாங்க மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

    முதல்-அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும்.

    நாடு முழுவதும் ஏறத்தாழ 6000 முதல் 10000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ள நிலையில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DoctorsStrike
    ×