search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt cement factory fire"

    அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் கள்ளங்குறிச்சி சாலையில் அரசுக்கு சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் உற்பத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென சுண்ணாம்பு கற்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் தீ பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்து ஊழியர்கள் தீயை அணைத்தனர். இதில் கன்வேயர் பெல்ட் எரிந்து நாசம் ஆனது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து சிமெண்ட் ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×