search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government official wife"

    வத்தலக்குண்டுவில் அரசு அதிகாரியிடம் நகையை பறித்தது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் அருகே உள்ள எழில்நகரில் வசித்து வருபவர் சக்திவடிவேல் முருகன். வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக(சத்துணவு) உள்ளார். அவரது மனைவி ரேணுகாதேவி, மகள் வர்ஷா, மகன் கோகுல். தற்போது பயிற்சிக்காக சக்திவடிவேல் முருகன் பவானிசாகருக்கு சென்றுள்ளார்.

    நேற்றிரவு ரேணுகாதேவி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் டவுசர் அணிந்திருந்தனர். மர்மநபர்கள் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்த அவர்கள் 2 பவுன்நகையை திருடிக்கொண்டனர். சத்தம் கேட்டு ரேணுகாதேவி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர்கள் நிற்பதை பார்த்து கூச்சல் போட்டார்.

    உஷாரான அவர்கள் ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு நகரில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவம் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.#tamilnews
    ×