என் மலர்
நீங்கள் தேடியது "god statue damaged"
- சுங்குவார்சத்திரம் அருகே 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
- இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கண்டிவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் அதே கிராமத்தில் இருக்கும் லஷ்மி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவகிராக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்கை சிலைகள், விநாயகர் சிலை உள்பட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி (வயது40) என்பவர் சாமி சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் மதுபோதையில் சாமி சிலைகளை சேதபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.