search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girls Achievement"

    • மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

    பரமக்குடி

    மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வாணிஸ்ரீ கலந்து கொண்டு மாநில அளவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இம்மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

    வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமையில் ஆசிரியர் அஜ்மல்கான், உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 88மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பள்ளியில் முதலிடம் பெற்ற மகேஸ்வரி மாணவி 528 மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிகள் ஆஷா ஷிபானா 520 மதிப்பெண்களும், தேவஸ்ரீ 520 மதிப்பெண்களும், மூன்றாவதாக மாணவி அபிநயா 518 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் கிரிஜா மாணவி 100 மதிப்பெண்களும், கணித அறிவியல் பிரிவில் மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளி முதல்வர் ரீனா முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.

    • முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.
    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவுகளில் மனிதநேயம் பாடல் மற்றும் தலைப்பை ஒட்டி வரைதல், கவிதை புனைதலில் முதலிடமும், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், தனி ஆங்கிலம் செவ்வியல் பாடல் தனி ஓவியம் வரைதலில் 2ம் இடமும் , செவ்வியல் நடன குழு , மேற்கத்திய நடன குழு,  நாட்டுப்புறப் பாடல் , தனி காகித வேலைப்பாடு ஆகியவற்றில் 3ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    நடனத்திற்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் இசை ஆசிரியர் கஜலட்சுமி ஓவிய ஆசிரியர் லாவன்யா ,தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் விஜயா பாராட்டு தெரிவித்தார். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

    ×