search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl-college"

    • சிறுமி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி நல்லம்மாள் நகரை சேர்்நதவர் ரத்னா. இவரது 17 வயது மகள் பிளஸ்-2 ேதர்வில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால் ரத்னா அவரை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் ரத்னா வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்ைல. இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூசையப்பர், ஆடு வியாபாரி. இவரது மகள் வெண்ணிலா(வயது19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சூர்யா வெளியூர் சென்று திரும்பியபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×