search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girivala Chariot"

    • முத்து கிருஷ்ணசுவாமி குரு பூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.
    • 26-ந்தேதி மாலை சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது கிரிவல தேரோட்டத்திருவிழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.

    தேரோட்டம்

    முன்னதாக சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்ட பத்தில் உள்ள ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.

    ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி குரு பூஜையை யொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தி யங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரத நாட்டியம், கோலாட்டங்க ளுடன் தேரோட்டம் நடை பெற்றது.

    வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள்

    சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். இத்தேரோட் டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மஹாமேரு தியான மண்ட பத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறு கிறது.

    26-ந்தேதி மாலை சூட்டுப் பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடை பெறுகிறது.

    பின்னர் குரு ஜெயந்தி ஆராதனாவும், அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடை பெறுகிறது. விழா ஏற்பாடு களை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×