என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gandhi Peace Prize"
- காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்து உள்ளது.
- ‘கீதா பிரஸ்’ கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
கோரக்பூர் :
2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 'கீதா பிரஸ்' பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்து உள்ளது.
இந்த நிலையில், காந்தி அமைதி விருதுடன் வழங்கப்படும் ரூ.1 கோடி பரிசுத்தொகையை ஏற்கமாட்டோம் என கீதா பதிப்பகம் அறிவித்து உள்ளது. எந்த வகையிலான நன்கொடையும் ஏற்பது இல்லை என்பதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவதால், இந்த தொகையை ஏற்க முடியாது என பதிப்பக மேலாளர் லால்மணி திரிபாதி கூறியுள்ளார். அதேநேரம் விருதை நிச்சயம் வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
- காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்த காந்தி அமைதி விருதுடன் ஒரு கோடி ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.
லக்னோ:
இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது
காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.
2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்நிலையில், கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்துள்ளது.
இதற்கிடையே, நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை என கீதா பதிப்பகம் அறிவித்துள்ளது.
- உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது.
- இந்த பதிப்பகம், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீதா பிரஸ், உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்று. இந்த பதிப்பகம், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில், 16 கோடியே 21 லட்சம் பகவத் கீதை புத்தகங்களும் அடக்கம். காந்திய கொள்கை அடிப்படையில், சமுதாய கூட்டு மேம்பாட்டுக்காக இந்த பதிப்பகம் ஆற்றிய முக்கியமான, இணையற்ற பங்களிப்புக்காக காந்தி அமைதி விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்