search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandashashti festival at"

    • வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வேலுமணி நகர் சக்தி விநா யகர் கோவிலில் பிள்ளையார்பட்டியில் நடப்பது போல் தினமும் கணபதி ஹோமம், மற்றும் மாதம் தோறும் 54 சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவில் வளாக த்தில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெரு மானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி வரும் 30-ந்தேதி மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹா ரயாகம், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது. பின்னர் சாந்தி அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி தேவசேனா ஆறு முகப் பெருமான் வெள்ளி க்கவசத்தில் அருள் பாலிக்கிறார் . இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்.ஏ, என்.ஆறு முகம், கே.நாகலட்சுமி, 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது. வரும் 31-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தேவ சேனா ஆறுமுக பெரு மானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் தலை மையில் கோவில் நிர்வாக த்தினர் செய்து வருகின்றனர் .

    ×