search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "funeral feast"

    • விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று இறுதி சடங்கு ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென இறுதி சடங்கு ஊர்வலத்திற்குள் வேகமாக புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×