search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full-term pregnant"

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர்.

    மேலூரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வலியால் துடித்த பரமேஸ்வரியை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. முசுண்டகிரி பட்டி அருகில் வரும்போது பரமேஸ்வரிக்கு வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் முத்தையா வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

    தொடர்ந்து பரமேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் விமல், பெண்ணுக்கும் குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    ×