search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "from peach"

    • ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் ரெயில்வே டி.எஸ்.பி பெரியசாமி மற்றும் ேபாலீ சார் ரோந்து சென்றனர். அப்போது பிளாட்பார்ம் 4-ல் ஐ லேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிழக்கு தெருவை சேர்ந்தத ராம்குமார் 19 என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் மது பாட்டில்களும் பறி முதல் செய்து போலீஸ் நிலையத்த்தில் ஒப்படைத்த னர். இதன் மதிப்பு 3 ஆயி ரத்து 840 ஆகும் . தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    ×