search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four militants killed"

    • மூன்று பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
    • பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை.

    ஸ்ரீநகர்:

    ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது டிராச் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் என்கவுன்டன் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களில் இருவர் ஹனன் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் தெற்கு காஷ்மீர் மூலு பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு காவல் அதிகாரி ஜாவேத்தார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவங்களில் இந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் குறிப்பிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக சாலையில் கண்ணிவெடியை புதைத்தபோது அது வெடித்து சிதறியதில், 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
    பைசாபாத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

    இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பதக்சன் மாகாணம், வார்தோஜ் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். 

    வாகனங்களை தகர்ப்பதற்காக தலிபான் பயங்கரவாதிகள், திர்கரன் பகுதியில் உள்ள சாலையில் கண்ணிவெடியை புதைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AfghanistanTaliban
    ×