என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் புதைத்தபோது வெடித்து சிதறிய கண்ணிவெடி- 4 தலிபான்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்27 April 2019 10:18 AM GMT (Updated: 27 April 2019 10:18 AM GMT)
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக சாலையில் கண்ணிவெடியை புதைத்தபோது அது வெடித்து சிதறியதில், 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பைசாபாத்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பதக்சன் மாகாணம், வார்தோஜ் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
வாகனங்களை தகர்ப்பதற்காக தலிபான் பயங்கரவாதிகள், திர்கரன் பகுதியில் உள்ள சாலையில் கண்ணிவெடியை புதைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AfghanistanTaliban
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X