search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Formar MLA"

    • இப்போது கடத்தப்படும் கனிம வளங்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.
    • பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாகி இருக்கும் இந்த கனிமவளங்கள் மீண்டும் உருவாக வேண்டும் என்றால் இன்னும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகும்.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    அமைச்சர் ஆய்வு

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம் கோழிவிளை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தான் விமான நிலையத்தில் இருந்து வருவதற்குள் 50-க்கும் மேற்பட்ட கனிமவள் லாரிகள் சாலையில் சென்றதாகவும், 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றிச் செல்லக்கூ டாது என்று அரசு தடை விதித்திருப்பது இருக்கிறது.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போன் செய்து அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். அவ்வாறு அமைச்சர் உத்தரவிட்ட பிறகும் கனிமவள வாக னங்களின் படையெடுப்பு நிறுத்தப்பட வில்லை.

    கனிமவள கடத்தல்

    இப்போது கடத்தப்படும் கனிம வளங்கக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. பல்லாயிரக்க ணக்கான வருடங்களாக உருவாகி இருக்கும் இந்த கனிமவளங்கள் மீண்டும் உருவாக வேண்டும் என்றால் இன்னும் பல்லாயிரக்க ணக்கான வருடங்களாகும். எனவே கனிமவளங்கள் பிற்கால சந்ததிகளுக்காக பாதுகாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×