search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for stealing iron bars"

    • கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

    இந்த கம்பெனியில் சம்ப வத்தன்று சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (36) 2 பேரும் சேர்ந்து கம்பெனிக்கு சொந்தமான பழைய இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை திருடி செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×