search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for smuggling liquor"

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி, அண்ணா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது 55 மது பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    விசாரணையில் மதுவை கடத்தியவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பங்காரு (38) என தெரிய வந்தது. இது குறித்து தாளவாடி போலீசார்

    வழக்கு பதிவு செய்து பங்காருவை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×