search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Football competition"

    • தூத்துக்குடி மாவட்ட மேல்நிலை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் எல்.கே. அணி அணி வெற்றி பெற்றது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட மேல்நிலை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஆறுமுகநேரியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியும், ஆறுமுகநேரி பெர்ல் பப்ளிக் பள்ளி அணியும் மோதின. இதில் 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் எல்.கே. அணி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்த பள்ளி மாவட்ட கால்பந்து போட்டியில் வென்றுள்ளது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பள்ளியின் தாளாளர் முகமது லெப்பை தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன், உதவி தலைமை ஆசிரியர்கள் முகமது சித்திக், ஷேக் பீர் முகமது காமில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால் முகமது, முகமது இஸ்மாயில் மற்றும் போட்டியின் போது வெற்றி கோல்களை அடித்த மாணவர்களான பாஜி, அக்ரம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இப்ராஹிம் முகமது நோபல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×