என் மலர்
நீங்கள் தேடியது "foot safety standards act"
பூதலூர்:
பூதலூரில் அனைத்து வணிகர் சங்க 19-ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றுவிழா, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா இணைந்த முப்பெரும் விழா தலைவர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சங்க கொடியேற்றி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை செயலாளருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசும் போது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தால் வணிகர்களுக்கு ரூ 3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்துவிடும். இந்த நிறுவனத்தை வரவிடாமல் தடுப்பது நம் கடமை.
வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ,சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது. ஆகியவற்றை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகிற 23,24,25 தேதிகளில் தேசிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் சார்பில் அடுத்த 24-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டதில் தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளோம். மேலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசியல்கட்சிகளுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






