என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "food preparation"
- விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள்.
- அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30, 31-ந் தேதி மற்றும் நவம்பர் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களிலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள். அப்படி உணவு வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டவிதிகளின்படி உணவு தயாரிப்பதற்கான பதிவு சான்று பெற வேண்டும். அதன் பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும்.
மேலும் அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று பெற 04286-299429 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்