என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood In Courtrallam Falls"

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    குற்றாலம் அருவிகளில் இன்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #CourtallamFalls
    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் அவ்வப்போது பெய்யும் கன மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளம் சீறிப்பாய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மலைப்பகுதியில் நேற்று இரவு மழை குறைந்த நிலையில் அதிகாலையில் இருந்து மீண்டும் மழை கொட்ட தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள தடாகம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது.

    புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் வெள்ளத்தால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    கன மழை காரணமாக குற்றாலம் சிற்றாற்றிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்றில் உள்ள 17 தடுப்பணைகளும் நிரம்பி கால்வாய்களிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கரையோரபகுதி மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #CourtallamFalls

    ×