search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fierce argument"

    • புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.
    • இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மாட்டி றைச்சி கடைகள் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 15,16-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் மாட்டிறைச்சி கடைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்ததன் கார ணமாக எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டிறைச்சி கடைகள் தரை மட்டமாக்கப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மாட்டி றைச்சி கடை உரிமை யாளர்கள், மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    தங்களுக்கு மீண்டும் வார சந்தையில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் தடையை மீறி நிரந்தரமாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்வ தில்லை எனவும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நகர்மன்ற கூட்டம் கூட்டப்பட்டு அதில் விவாதம் செய்து கடை அமைப்பது குறித்து முடிவு தெரிவி க்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இந்நிலையில் நேற்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆணையாளர் சையது உசேன், துணைத்தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் பேசும்போது,

    மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட பிரச்ச னையில் ஆணையாளர் எடுத்த திடீர் தன்னிச்சையான முடிவினால் தற்பொழுது நகர மன்ற தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

    அந்த கடைகளை அகற்றியது ஆணையாளர் தான் எனவும், இதனால் ஆணை யாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் திடீரென கூட்டம் நடந்து கொண்டிரு க்கும் பொழுதே நகராட்சி ஆணையாளர் சையது உசேன் திடீரென வெளி யேறி தனது அறைக்கு சென்று விட்டதால் ஆத்திர மடைந்த நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரின் அறைக்குள் சென்று அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது தவறு எனவும், அதனால் மீண்டும் வந்து முறைப்படி கூட்ட த்தை முடித்து வைக்க வேண்டும்.

    உங்களால் தான் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ள்ளது என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து சமாதானம் அடைந்த ஆணையாளர் சையது உசேன் மீண்டும் நகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை முடித்து வைப்பதாகவும்,

    ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டும் மாட்டு இறைச்சி விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்க லாம் எனவும், அதன் பிறகு மாற்று இடத்தில் நிரந்தர கொட்டகை அமைத்து வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் அளித்ததின் பேரில் கூட்டம் முடிவடைந்தது.

    • நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம்
    • இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் கமிஷனர் பொறுப்பு மகேஸ்வரி நகராட்சி பொறியாளர் பாண்டு துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு- பாரூக் அலி :- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது ஆனால் இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி யார் யாருக்கு வரி பாக்கி உள்ளது என தெரிவித்தால் அதனை எளிதாக வசூல் செய்வதற்கு ஏதுவாக அமையும் மேலும் வரி தொடர்பாக அதற்கு குழு உள்ளது இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எந்த கூட்டமும் கூட்டவில்லை ஆகையால் வரி வசூல் செய்வதற்கு கவுன்சிலருடன் இணைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,   ராணி: - நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெற்று வருகின்றது ஆனால் எங்கள் வார்டுக்கு இதுவரை 100 நாள் திட்டப்பணிகள் ஒதுக்கவில்லை இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் எங்களிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் எங்களால் பதில் கூற முடியவில்லை மேலும் எங்கள் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாராததால் பொதுமக்களிடையே வீண் பிரச்சனை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தமிழன்:- நகராட்சியில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள் ஆனால் எங்கள் பகுதிகளில் அதிகளவில் குடிசை வாழ் மக்கள் உள்ளதால் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார் அப்போது கவுன்சிலர் பூபாலன் , கூட்டம் தொடங்கியதில் இருந்து அதிக நேரம் பேசி வருகிறீர்கள் மேலும் எங்கள் பகுதியிலும் மண் சாலை உள்ளது அதனை தார்சாலையாக மாற்ற வேண்டும். மேலும் நாங்கள் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என கூறினார்.  அப்போது முத்தமிழன், எனது வார்டு தொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகின்றேன் உங்களுக்கு தார் சாலை வேண்டுமென்றால் கோரிக்கை வையுங்கள் என தெரிவித்தார் அப்போது இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.     இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கொண்டு வந்துள்ள அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து கூட்டத்தை முடித்தார்  அப்போது பெண் கவுன்சிலரின் கணவர் பிச்சை என்பவர் தி.மு.க. கவுன்சிலர் முத்தமிழனிடம் நகர்மன்ற கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினர் . இதில் முத்தமிழன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம். நீங்கள் இதுபோல் இங்கு வந்து பேசக்கூடாது அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இலக்கியா கணவர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன் எங்கள் பகுதியிலும் அதிகளவில் குடிசை பகுதி உள்ளது மேலும் மண்சாலை அதிக அளவில் உள்ளது என கேள்வி எழுப்பிய போது மீண்டும் முத்தமிழனுக்கும் சாமிநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலரான இலக்கியா பேச வேண்டும் ஆனால் இந்த கூட்டரங்கில் கவுன்சிலரின் கணவரான நீங்கள் எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பினர். இதில் ஜெயபிரபா மணிவண்ணனுக்கும், சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஜெயபிரபா மணிவண்ணன் கணவர் திமுக நகர செயலாளர் மணிவண்ணன் இதனை தட்டி கேட்டபோது மணிவண்ணனுக்கும் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    ×