search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Famous"

    • சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் அடிக்கடி போலீசார், சிறை வார்டன்கள் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஜெயிலில் தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்கள். இந்த நிலை யில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி (வயது 40) என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இவர் செல்போனை பயன்படுத்தி, ஆள் கடத்த லில் ஈடுபட்டு வருவது சிறை அதிகாரிகள் விசா ரணையில் தெரிய வந்தது.

    மேலும் அழகிரி மீது

    20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார். இதையடுத்து சிறை துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவின்பேரில் நேற்று அழகிரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×