search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explores"

    • குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சி குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய துணைச்செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    ×