என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executives arrested"

    • திருமங்கலம் அருகே அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
    • தோப்பூர்-ஆஸ்டின்பட்டி சந்திப்பு சாலையில் தங்களது கொடிக்கம்பத்தை நடுவதற்காக குழி தோண்டினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 4வழிச்சாலையில் உள்ள தோப்பூர்-ஆஸ்டின்பட்டி சந்திப்பு சாலையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் தங்களது கொடிக்கம்பத்தை நடுவதற்காக குழி தோண்டினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மற்றும் 4வழிச்சாலை ரோந்து வாகன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கொடி கம்பம் நட அனுமதி இல்லை. எனவே குழி தோண்டக் கூடாது என கண்டிப்புடன் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரோந்து வாகன அதிகாரி அருண்கு மார் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூத்தியார் குண்டுவை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கண்ணன்(வயது33), வேல்முருகன்(18), சின்னன்(43), திரவியம்(53), பழனிகுமார்(35), பால முருகன்(32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சேகர் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×