search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVM malfunctions"

    கன்னியாகுமரி தொகுதியில் 50 இடங்களில் மின்னணு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். #LokSabhaElections2019
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஆனால் பல வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மணிக்கணக்கில் காத்து நின்று வாக்களித்தனர். சில இடங்களில் பொறுமை இழந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் எந்திரம் சரி செய்யப்பட்டதும் மீண்டும் வந்து வாக்களித்தனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே எந்திரம் செயல்படவில்லை. அப்போது 40-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க காத்து நின்றனர். 8 மணி வரை அவர்கள் காத்து நின்றும் எந்திரத்தின் பழுது சரி செய்யப்படாததால் வாக்காளர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பழுது சரி செய்யப்பட்டதும் வந்து வாக்களிப்போம் என அவர்கள் கூறினர்.

    பொன்மனை 43-வது வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை. பெருஞ்சாணி 32-வது வாக்குச்சாவடியில் திடீரென எந்திரம் பழுதாகி நின்றது. இதேபோல அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வாக்குச்சாவடி, செறுகோல் ஊராட்சி 150-வது வாக்குச்சாவடி, அயக்கோடு ஊராட்சி கல்லடிமாமூடு 89-வது வாக்குச்சாவடி, கல்லங்குழி 118-வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது.

    நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாக்களித்த எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    நாகர்கோவில் பகுதியில் மட்டும் 14 இடங்களில் எந்திரம் பழுதானது. இதில் இருளப்பபுரம், மாதவலாயம், கிருஷ்ணன் கோவில், இறச்சகுளம் பகுதியில் எந்திரங்களை பழுது பார்க்க முடியாததால் வேறு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    கிள்ளியூர் தொகுதியில் 16 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் எந்திரம் பழுது ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.  #LokSabhaElections2019
    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கின்றனர்.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது.

    நெல்லை கோடீஸ்வரன் நகர், நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி, ஒட்டன்சத்திரம், காட்பாடி எல்ஜிபுதூர், திருப்பூர் அரண்மனைபுதூர், பெரியகுளம் செவன்த் டே பள்ளி, நாகையில் உள்ள 151வது பூத், கோவை சித்தாபுதூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.



    இதேபோல் அஸ்ஸாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    பொள்ளாச்சி கோட்டூர் சாலை பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #TNElections2019

    ×