என் மலர்
நீங்கள் தேடியது "Equality Party"
- தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
தஞ்சாவூர்:
சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் சமத்து நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாஞ்சிக்கோட்டை சாலை மாதவராவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை நகர தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தஞ்சை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியாளர்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை மதிய உணவு பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சமத்துவ விருந்து அருந்தினர்.
அப்போது பேசிய துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
அவரின் பிறந்தநாளை எந்த வகையிலான ஒடுக்கு முறை, அநீதி, பாரபட்சத்துக்கும் எதிராக நம்மை தயார்படுத்துவது தான் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தன்னார்வலர்கள் சுந்தரி, மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார்.
சேலம்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
உறுதி மொழி
இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் வரவேற்றார். சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ஜவகர், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜு,
தொகுதி செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ விருந்து சரத்குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தி பேசியதாவது:-
இந்த சமத்துவ விருந்தை ஒற்றுமை வலியுறுத்தும் விருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமத்துவம் என்பது கொள்கை அடிப்ப
டையில் மட்டும் இல்லா
மல் அனைவரது எண்ணங்க ளிலும் இருக்க வேண்டும்.தானத்தில் சிறந்ததானம் அன்னதானம். அந்த வகையில் மாதந்தோறும் 10 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுந்தர், சமத்துவ விருந்து குறித்து விளக்கி பேசினார். பொருளாளர் சுந்தரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், மகாலிங்கம், கொள்கை பரப்புச் செயலா ளர் விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மாவட்ட செயலாளர் மாதையன், சிவா, முருகேசன், சரவணன், தங்கவேல், மோகனவேல், கோவிந்தசாமி, பகுதி, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிரணி துணை செயலாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.






