search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "English Competition"

    • 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.
    • மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

    திருவள்ளூர்:

    ஆங்கிலத்தில் படித்தல், உச்சரித்தல், பொருள் கூறுதல் தொடர்பாக 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023–24ம் ஆண்டிற்கான மாநில மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா ஆகிய இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.

    தேசிய அளவிலான போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 2 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64 மாணவ-மாணவியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றனர்.

    இதில் மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் ஆங்கிலத்தில் தேசிய அளவில் அசத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×