என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England cricket board"

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.
    • 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் இங்கிலாந்து அரசியல்வாதிகள் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    • இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் பர்மிங்காம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் லாட்ஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×