search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee died after"

    • கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
    • தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (43). இவரது மனைவி மலர்மணி (33). கணேசன் புங்கம் பள்ளியில் அரசு கால்நடை மருத்துவமனையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் உடல்நிலம் பாதிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில மாதங்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்த னர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×