என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elumpallam lake"

    • மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது.
    • மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது சூழல் சுற்றுலா மையம்.இந்த சூழல் சுற்றுலா மையத்திற்குள் மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அடிக்கடி அப்பகுதி விவசாயிகளுக்கு வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஏரியை தூர்வாரி பாசன வாய்க்கால்களை முறைப்படுத்துவதற்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இப்பணி துவங்க உள்ள நிலையில் கடந்த சில மாதங்களில் அதீத கனமழையால் இந்த ஏரியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் கசியும் நிலை உருவானது.இதனை சீர் செய்யச் சென்ற விவசாயிகளுக்கு ஒரு சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    இதேபோல் நேற்று அந்த ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் கரைகளை சீரமைக்க சென்ற விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக விவசாயிகள் சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவத்தன்று மாலை வனத்துறை ரேஞ்சர் நாதன் தலைமையில் மன்னவனூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் விவசாய பொதுமக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்கும் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்வத்துடன் மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பாசன வாய்க்கால்கள் மற்றும் ஏரிக்கரை பகுதிகளை விவசாயிகள் சீரமைத்தனர்.

    • எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து ஏரியை தூர் வாரவும், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் முழு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள செந்தில்குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துமாரி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ் பாண்டி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
    • மேல்மலை கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டி நீர் மறுகால் செல்கிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் ஏரி முழுகொள்ளளவை எட்டி நீர் மறுகால் செல்கிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேல்மலை கிராமங்களில் பூண்டு, கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

    இந்த ஏரியை புனரமைக்கவும், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு சார்பில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடைப்பு சரிசெய்யப்படாததால் அதிகளவு தண்ணீர் வெளியேறி வீணாகி செல்லும் நிலை உள்ளது. பணிகளை மேற்கொள்ளாததால் போதிய நீரை தேக்கி வைக்க முடியாத நிலையும் உள்ளது.

    எனவே இப்பணிகளை அறுவடை காலம் தொடங்க உள்ள இந்த காலத்திலாவது நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது வெள்ளைப்பூண்டு மற்றும் கேரட் அறுவடை பணிகள் இன்னும் ஒரு சிலநாட்களில் ெதாடங்க உள்ளதால் அதிகாரிகள் எழும்பள்ளம் ஏரியை சீரமைக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது மன்னவனூரில் பல்ேவறு சுற்றுலா மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள் அதிகளவில் வருவதால் ஒரு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர தடைசெய்யப்பட்ட மரங்கள் அதிகளவு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை நிலத்தடி நீரை சேமிக்க விடாமல் செய்யும் ஆபத்து கொண்டதாகும்.

    எனவே வேளாண் அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×