என் மலர்
நீங்கள் தேடியது "எழும்பள்ளம் ஏரி பராமரிப்பு பணி"
- மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது.
- மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது சூழல் சுற்றுலா மையம்.இந்த சூழல் சுற்றுலா மையத்திற்குள் மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அடிக்கடி அப்பகுதி விவசாயிகளுக்கு வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏரியை தூர்வாரி பாசன வாய்க்கால்களை முறைப்படுத்துவதற்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இப்பணி துவங்க உள்ள நிலையில் கடந்த சில மாதங்களில் அதீத கனமழையால் இந்த ஏரியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் கசியும் நிலை உருவானது.இதனை சீர் செய்யச் சென்ற விவசாயிகளுக்கு ஒரு சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதேபோல் நேற்று அந்த ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் கரைகளை சீரமைக்க சென்ற விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக விவசாயிகள் சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவத்தன்று மாலை வனத்துறை ரேஞ்சர் நாதன் தலைமையில் மன்னவனூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் விவசாய பொதுமக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்கும் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்வத்துடன் மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பாசன வாய்க்கால்கள் மற்றும் ஏரிக்கரை பகுதிகளை விவசாயிகள் சீரமைத்தனர்.






