search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant entered"

    • போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் தங்கி பணிபுரியும் வகையில், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளை காட்டு யானை அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது. இந்தநிலையில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு மூங்கில் மரங்களை ஒடித்து தின்றது. போலீசார் செல்லும் சாலையின் நடுவே யானை நின்றதால், போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை நடமாட்டத்தால் பணி முடிந்து குடியிருப்புக்கு திரும்பும் போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ×