search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrification Work"

    • நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரெயில் பாதைகள் முழுவதும் மின் மயமாக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது.
    • மேட்டூர்- பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இடையிலான பகுதிகளில் மின் வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரெயில் பாதைகள் முழுவதும் மின் மயமாக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்டவாளம் பகுதிகளில் மின் கம்பங்கள் மட்டும் நடும் பணிகள் நடைபெற்ற நிலையில், மின்கம்பங்களுக்கு இடையே மின் வயர்கள் இணைக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேட்டூர் ரெயில் நிலையத்திலிருந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இடையிலான பகுதிகளில் மின் வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். ரெயில்வேயில் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் முழுவதுமாக நெல்லை- தென்காசி இடையிலான ரெயில்வே பாதையில் மின்சாரத்தில் இயங்கும் ரெயில் எஞ்சின்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் தெரிகிறது.

    ×